முகப்பு
புதுச்சேரி

அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் புதிய பாடப் பிரிவுகள் தொடக்கம் 

புதுச்சேரி அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மையத்தில் மூன்று புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. 

Updated On : 18 ஏப்ரல் 2018, 8:44 am IST
பகிர்:

புதுச்சேரி அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு மையத்தில் மூன்று புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன.
 புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு நிறுவனமான அன்னை தெரசா சுகாதார அறிவியல் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்கு, வரும் கல்வியாண்டு (2018-19) முதல், புதிய பாடபிரிவுகள் தொடங்க புதுச்சேரி பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.
 அதன்படி, பி.எஸ்சி (ரேடியோகிராபிக் மற்றும் இமேஜிங் டெக்னாலஜி), எம்.எஸ்சி. ( நர்சிங் இன் பீடியாட்ரிக்ஸ்), பி.எச்டி., (நர்சிங்) தொடங்கப்படும். இவற்றுக்கு நுழைவுத் தேர்வு வைத்து எம்.எஸ்சி, பி.எச்டி படிப்புகளுக்கு தனித்தனியே 5 இடங்களும், பி.எஸ்சி படிப்புக்கு 15 இடங்களும் நிரப்பப்படும் என இப்பட்ட மேற்படிப்பு மைய முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.