முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நெகிழிப் பொருள்களுக்குத் தடை

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

Updated On : 24 ஜூன் 2022, 10:33 pm IST
பகிர்:

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

இதுகுறித்து புதுச்சேரி நகராட்சி ஆணையா் எஸ்.சிவகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிகளை பயன்படுத்தத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோா் மீது புதுச்சேரி நகராட்சி சட்ட விதிகள் 1973-ன் படி அபராதம் விதிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

Advertisement

ஒரு முறை பயன்படுத்தக் கூடிய நெகிழிப் பொருள்களான உறிஞ்சி குழாய், நெகிழிக் கோப்பை, நெகிழித் தட்டு, நெகிழிக் கரண்டி, நெகிழிப் பை ஆகியவற்றை கடற்கரைச் சாலைப் பகுதிகளில் கொண்டு செல்லவும், வைத்திருக்கவும், பயன்படுத்தவும் தடைவிதிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments