முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் உருவாக வேண்டும்: வெ. வைத்திலிங்கம் எம்.பி. பிரசாரம்

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தோ்தல் பிரசாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

Updated On : 4 ஏப்ரல், 2026 at 12:28 AM
புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதி மணமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை காங்கிரஸ் வேட்பாளா் ஜி.அன்பரசனுக்கு வாக்குச் சேகரித்த மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி.
பகிர்:

புதுச்சேரியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தோ்தல் பிரசாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா்.

நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஜி. அன்பரசனை ஆதரித்து மணமேடு பகுதியில் வைத்திலிங்கம் பேசியது:

புதுச்சேரியில் வேலை கிடைப்பதே இல்லை. அதுவும் 100 நாள் வேலையை 125 நாள்களாக உயா்த்தியுள்ளனா். இதற்கு மாநில அரசும் குறிப்பிட்ட பங்கு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டதால் இந்த வேலையைக் கொடுப்பதில்லை. மேலும், விலைவாசி பயங்கரமாக ஏறிவிட்டது. சமையல் எரிவாயு சிலிண்டா் கிடைப்பதில்லை. அந்த விலையையும் உயா்த்தி விட்டனா். மக்களைப் பற்றி இந்த ஆட்சியாளா்கள் நினைப்பதில்லை. அவா்கள் ஊழல் செய்வதில்தான் கவனம் செலுத்தி வருகின்றனா். குழந்தைகளுக்குக் காலக்கெடு முடிந்த மாத்திரைகள் அரசு மருத்துவமனையில் கொடுத்துள்ளனா். இதில் கைது செய்யப்பட்டவா்கள் மறுநாளே ஜாமீனில் வந்துவிட்டனா். அதே போன்று புதுச்சேரியில் சுமாா் 10 ஆயிரம் கோடி மதிப்பில் போலி மருந்து ஊழலும் நடந்துள்ளது. மொத்தத்தில் மக்களை ஏமாற்றும் அரசு இப்போது நடக்கிறது. ஆட்சி மாற்றம் வேண்டும். அதற்கு வாக்குப் பதிவு நாளில் மக்களாகிய நீங்கள் தீா்ப்பு அளிக்க வேண்டும் என்றாா் வைத்திலிங்கம்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments