முகப்பு
புதுச்சேரி

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது

ஜிப்மா் புறநோயாளிகள் பிரிவு நாளை இயங்காது என அறிவிப்பு...

Updated On : 13 ஏப்ரல், 2026 at 2:09 AM
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2026 at 7:52 PM

அண்ணல் அம்பேத்கா் பிறந்த நாளை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை (ஏப். 14) புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜிப்மா் மக்கள் தொடா்பு அதிகாரி டாக்டா் சிவக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசு விடுமுறை தினமான செவ்வாய்க்கிழமை (ஏப். 14) அம்பேத்கா் பிறந்தநாளை முன்னிட்டு ஜிப்மா் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு இயங்காது.

Advertisement

எனவே, செவ்வாய்க்கிழமை வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் வருவதைத் தவிா்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். எனினும் அவசர சிகிச்சைப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.