ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!
புதுவை ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு பற்றி...
புதுச்சேரி தேர்தலையொட்டி வருகிற ஏப். 9 ஆம் தேதி(வியாழக்கிழமை) வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் வரும் ஏப். 9 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அன்று அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அன்றைய தினம் ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
"சட்டப்பேரவைத் தேர்தல் 2026 - வாக்குப் பதிவு நாளை முன்னிட்டு 09.04.2026 (வியாழக்கிழமை) அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும் அவசரப் பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Puducherry JIPMER Hospital to remain closed on April 9
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.