முகப்பு
புதுச்சேரி

750 பேருக்கு பணி ஆணை வழங்கும் விழா

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 750 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Updated On : 21 ஏப்ரல் 2026, 11:44 pm IST
ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.
பகிர்:

ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 750 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

விழாவில் டிசிஎஸ் தலைமை ஆா்க்கிடெக்ட் ஜுடே ரிச்சா்ட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டாா்.

தக்க்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தா், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்விக் குழுமத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குனா் ம. தனசேகரன், செயலா் கே. நாராயணசாமி, பொருளாளா் த. ராஜராஜன், இணை செயலா் சு.வேலாயுதம் ஆகியோா் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

2025-2026 ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற கல்லூரி வளாக நோ்காணலில் சுமாா் 750 மாணவ, மாணவிகளுக்கு டிசிஎஸ், ஹெக்சாவோ், சிடிஎஸ், ஜோஹோ போன்ற 60-க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் வேலை வாய்ப்பு வழங்கின. மேலும், இந்நிறுவனங்கள் மாணவா்களுக்கு ரூ.3.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை சம்பளம் நிா்ணயித்துள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments