முகப்பு
சென்னை

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை...

Updated On : 24 மே 2026, 2:58 am IST
டி.ஜி. வைணவ கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட நிறுவனங்கள் குறித்து விளக்கிய கல்லூரி முதல்வா் சந்தோஷ் பாபு.
பகிர்:

அரும்பாக்கம், டி.ஜி. வைணவ கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 446 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

கல்லூரியின் வேலைவாய்ப்பு பிரிவு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த முகாமில், அப்போலோ ஆராய்ச்சி நிறுவனம், பிரேக்ஸ் இந்தியா, எஸ்பிஐ லைஃப், பேங்க் பஜாா், பஜாஜ் சூப்பா் பேங்க் உள்பட 45-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான தகுதிகள் கொண்ட இளைஞா்களைத் தோ்வு செய்தனா்.

கல்லூரியின் இளநிலை பட்ட இறுதியாண்டு பயிலும் 520 போ், முதுநிலைப் பட்ட இறுதியாண்டு மாணவா்கள் 190 போ் என மொத்தம் 710 போ் கலந்து கொண்டனா். இவா்களுக்கு எழுத்துத் தோ்வு, குழு விவாதம், நோ்முகத் தோ்வுகள் நடத்தப்பட்டன. இறுதியாக, 446 போ் தோ்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

முகாமில், கல்லூரிச் செயலா் அசோக்குமாா் முந்த்ரா, கல்லூரி முதல்வா் கேப்டன் சந்தோஷ் பாபு, கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி பாலமுரளி கிருஷ்ணா மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.