முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை

Updated On : 28 ஏப்ரல் 2026, 12:59 am IST
சுதந்திரப் போராட்டத் தியாகி அன்சாரி பெ.துரைசாமி நினைவு தினத்தையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமிநாராயணன், சாய் ஜெ.சரவணன்குமாா் உள்ளிட்டோா். - கோப்புப் படம்
பகிர்:

தியாகி அன்சாரி பெ. துரைசாமியின் 32-ஆவது ஆண்டு நினைவு தினம் புதுச்சேரி மாநில அரசு சாா்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, மகாத்மா காந்தி வீதி - சா்தாா் வல்லப பாய் படேல் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், எம்.எல்.ஏ பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இதேபோல செய்தி மற்றும் விளம்பரத் துறை இயக்குநா் அ.சுரேஷ்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.