புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!
புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது பற்றி...
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு, புதுச்சேரி சோலை நகரை சோ்ந்த 9 வயது பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாா். அவரது சடலம் அந்தப் பகுதியிலுள்ள கழிவுநீா் கால்வாயில் மீட்கப்பட்டது.
இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த விவேகானந்தன் (56), கருணாஸ் (19) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Advertisement
Advertisement
இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்திருண்ட நிலையில், விவேகானந்தன் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
இந்த வழக்கின் விசாரணை புதுச்சேரி போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கருணாஸ் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதுவை அரசு தரப்பில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குற்றவாளிக்கான தண்டனை விவரங்களை மே 5 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.