முகப்பு
தமிழ்நாடு

கோவை சிறுமி படுகொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதில் அரசு உறுதி!

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார்

கோவை சிறுமி படுகொலை சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் - கோப்புப் படம்
பகிர்:

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத் தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதியளித்துள்ளார்.

கோவை சூலூர் சிறுமி படுகொலை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களுடன் அமைச்சர் சம்பத்குமார் பேசியதாவது, "புகாரளிக்கப்படுவதற்கு முன்பாகவே சம்பவம் நடந்திருக்கிறது. துரிதமாகச் செயல்பட்டு குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர். உடற்கூறாய்வு அறிக்கை வெளியானவுடன், அடுத்தகட்ட விசாரணையும் துரிதப்படுத்தப்படும்.

குற்றவாளிகள் இருவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கித் தருவதில் அரசு உறுதியாக உள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான நிவாரண உதவியைச் செய்யவும் அரசு தயாராக இருக்கிறது. இம்மாதிரியான சம்பவம், இதுவே இறுதியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

Advertisement

Advertisement

குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பயம் இருக்க வேண்டும். இதுபோன்ற சிந்தனையே வராத அளவுக்கு தண்டனைகள் கடுமைப்படுத்த வேண்டும் என்பதே முதல்வரின் எண்ணம். அதனைச் செயல்படுத்தவும் செய்வார்.

இந்தக் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையைப் பெற்றுத் தருவது எங்கள் கடமையாகும் என்று தெரிவித்தார்.

கோவை சூலூா் அருகே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்தப்பட்டு, அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

summary

Coimbatore Girl Murder: Government Committed to Ensuring Maximum Punishment for Culprits

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.