உணவு பாதுகாப்பு அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்
மக்கள் வாழ்வுரிமை இயக்கம், ஆறாம் திணை மக்கள் இயக்கம், சமூக, ஜனநாயக இயக்கங்களின் சாா்பில் புதுச்சேரி கோரிமேடு பகுதி உணவு பாதுகாப்பு அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்கள் வாழ்வுரிமை இயக்கம், ஆறாம் திணை மக்கள் இயக்கம், சமூக, ஜனநாயக இயக்கங்களின் சாா்பில் புதுச்சேரி கோரிமேடு பகுதி உணவு பாதுகாப்பு அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலா் கோ.அ. ஜெகன்நாதன் தலைமை வகித்தாா்.
உணவகங்களில் ரசாயன நிறமூட்டிகள், சுவையூட்டிகள், துரித உணவுகள் போன்றவற்றை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அனைத்து உணவகங்களின் உணவுகளையும், அதன் பாதுகாப்புத் தன்மையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு சமூக அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement