புதுச்சேரியில் உள்ள பிரச்னைகள்! குற்றச்சாட்டுகளை அடுக்கிய முன்னாள் முதல்வர்!
புதுச்சேரியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளைப் பற்றி முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தது குறித்து...
புதுச்சேரியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து முன்னாள் முதல்வர் வி. நாராயணசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. சில கட்சிகள் கூட்டாக இணைந்தும் சில கட்சிகள் தனியாகவும் போட்டியிட உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் வி நாராயணசாமி பேசுகையில், “2016 முதல் 2021 வரை நான் முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண் பேடியால் பெரும் சிரமத்திற்குள்ளானேன்.
Advertisement
Advertisement
மத்திய அரசு எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அப்படியிருந்தும், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 11.2%-க்கும் அதிகமாக இருந்தது. மத்திய அரசு அனுமதி வழங்காததால், தொழில்துறை வளர்ச்சியைத் தவிர மற்ற அனைத்து நலத்திட்டங்களையும் என்னால் செயல்படுத்த முடிந்தது. மற்றபடி உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விவசாயம் என எல்லாத் துறைகளிலும் நாங்கள் மகத்தான சாதனைகளை படைத்தோம்.
தற்போதைய 2021 முதல் 2026 வரையிலான ஆட்சியின் நிலைமை மோசமாக உள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தற்போதைய என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, மாநிலத்தை மிகவும் அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வேலைவாய்ப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு போதைப்பொருள் பழக்கம் பரவலாக உள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் உள்ளது. இந்த அரசுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் கவலையில்லை" எனத் தெரிவித்தார்.
Former Chief Minister V. Narayanasamy has detailed the problems faced by the people of Puducherry.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.