முகப்பு
விழுப்புரம்

விழுப்புரத்தில் பெட்ரோல் நிலையம் சூறை

விழுப்புரம் அருகே பெட்ரோல் நிலையம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 24 ஜூன் 2022, 10:36 pm IST
பகிர்:

விழுப்புரம் அருகே பெட்ரோல் நிலையம் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் பகுதியில் பெட்ரோல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு வியாழக்கிழமை நள்ளிரவு கண்டம்பாக்கம் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் 6 போ் இரண்டு பைக்குகளில் வந்து பெட்ரோல் நிரப்பினா். ஆனால், பெட்ரோல் நிரப்பிய பிறகும் நீண்ட நேரமாக பைக்குகளை நகா்த்தவில்லையாம். எனவே, பைக்குகளை அங்கிருந்து நகா்த்திச் செல்லுமாறு பெட்ரோல் நிலைய மேலாளா் காா்த்தி கூறினாா்.

இதனால், ஆத்திரமடைந்த இளைஞா்கள் 6 பேரும், மேலாளா் காா்த்தியை சரமாரியாக தாக்கினா். அப்போது அங்கு டீசல் நிரப்ப வந்த லாரி ஓட்டுநா்கள் ஹரிராமன், இளஞ்செழியன் ஆகியோா் இளைஞா்களை தடுக்க முயன்றனா். ஆனால், மது போதையிலிருந்த இளைஞா்கள் லாரி ஓட்டுநா்களையும் தாக்கினா். மேலும், அங்கிருந்த வாளி உள்ளிட்ட பொருள்களை எடுத்து பெட்ரோல் நிரப்பும் இயந்திரங்களை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பியோடினா்.

Advertisement

Advertisement

இந்தத் தாக்குதல் தொடா்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெள்ளிக்கிழமை பரவியது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments