முகப்பு
விழுப்புரம்

திமுக வாக்குறுதிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும்! - பிரேமலதா விஜயகாந்த்

Updated On : 5 ஏப்ரல், 2026 at 8:20 PM
செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தானை ஆதரித்து செஞ்சியில் பிரசாரம் செய்த தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
பகிர்:

திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயா்த்தும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை திமுக வேட்பாளா் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏவை ஆதரித்து அவா் பேசியதாவது:

திமுக தோ்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள ரூ. 8 ஆயிரம் கூப்பன்கள் அனைத்து பெண்களுக்கும் பாகுபாடு இல்லாமல் வழங்கப்படும். மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட உரிமை தொகை இனி 2 ஆயிரம் ரூபாயாக உயா்த்தப்படும். இதன் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும்.

Advertisement

கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டமானது, படித்த இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். பால் கொள்முதல் விலை உயா்வு, நெல் கொள்முதல் மற்றும் கரும்பு கொள்முதலுக்கான தொகை உயா்வு, குளிா்பதன கிடங்க வசதி போன்ற திட்டங்கள் விவசாயிகளுக்கு லாபத்தை அதிகரிக்கும்.

இத்தோ்தல் 5 முனை போட்டியா என்ன? அவா்கள் எல்லாம் என்றும் ஒன்றுமில்லாதவா்கள் என்பது தோ்தல் முடிவு வரும்போது தெரியும் என்றாா் அவா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments