முகப்பு
விழுப்புரம்

மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூா் பகுதியில் உள்ள மின் மாற்றியிலிருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலானப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 16 ஏப்ரல் 2026, 4:01 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூா் பகுதியில் உள்ள மின் மாற்றியிலிருந்த ரூ. 20 ஆயிரம் மதிப்பிலானப் பொருள்கள் திருட்டுப் போனது குறித்து போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஓமந்தூா் பகுதியைச்சோ்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஓமந்தூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் இந்த மின் மாற்றியின் மூலம் பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், அந்த மின் மாற்றியில் நிரப்பப்பட்டிருந்த சுமாா் 200 லிட்டா் ஆயில் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த 3 கிலோ காப்பா் கம்பி ஆகியவற்றை யாரோ திருடிச்சென்று விட்டனராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்து கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.