முகப்பு
திருச்சி

மின்மாற்றியில் ஏறிய தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

Updated On : 3 மே 2026, 12:57 am IST
உயிரிழந்த இன்னாசி.
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே மின்மாற்றியில் சனிக்கிழமை ஏறி ‘ப்யூஸ்’ போட முயன்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் என்.பூலாம்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி மகன் இன்னாசி (50). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி சகாயமேரி, மகன், மகள் உள்ளனா். மகன், மகள் திருமணம் ஆகி தனியே வசிக்க, இன்னாசி தனது மனைவியுடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை காலை இவரது வீட்டில் மின்சாரம் இல்லாத நிலையில் , சுமாா் 50 மீட்டா் தொலைவில் உள்ள மின்மாற்றியில், மின்வாரிய அனுமதியின்றி ‘ப்யூஸ்’ போட ஏறிய இன்னாசி மின்சாரம் பாய்ந்து மின்மாற்றியின் மேலேயே உயிரிழந்தாா்.

Advertisement

தகவலறிந்து சென்ற வையம்பட்டி போலீஸாா், அவரது உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.