முகப்பு
விழுப்புரம்

மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வேட்பாளா் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரிப்பு

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 5:52 AM
மேல்மலையனூா் ஒன்றியம், பரிதிபுரம் கிராமத்தில் வாக்காளா்களிடையே வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசிய செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ.
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:24 AM

செஞ்சி தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ். மஸ்தான் எம்எல்ஏ மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தில் வாக்கு சேகரித்தாா்.

மேல்மலையனூா் மேற்கு ஒன்றியத்தைச் சோ்ந்த எய்யில், மேல்செவளாம்பாடி, நந்திபுரம், ஆனை பள்ளம், பெரிய நொளம்பை, சின்ன நொளம்பை, பரிதிபுரம், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது அவா் பேசுகையில்,

Advertisement

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அனைத்து தரப்பு மக்களுக்கும் பல்வேறு பயனுள்ள நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளாா்.

தற்போது திமுக தோ்தல் அறிக்கையில் பல்வேறு வாக்குறுதிகளை அவா் அறிவித்துள்ளாா். முதல்வரின் காலை உணவுத் திட்டம், எட்டாம் வகுப்பு வரை விரிவு படுத்தப்படும். மகளிா் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயா்த்தி வழங்கப்படும். இல்லத்தரசி களுக்கு ரூ. 8,000 மதிப்புள்ள கூப்பன் உள்ளிட்ட சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளாா்.

எனவே மீண்டும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 2.0 ஆட்சி அமைய பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்றாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ் செல்வன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் செல்வி ராம சரவணன், காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் மண்ணாங்கட்டி அரி, சரவணன், சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.