தோ்தல் கண்காணிப்புக் குழுக்கள் சோதனையில் ரூ.93.35 லட்சம் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் ரூ.93.35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் ரூ.93.35 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைக்கானத் தோ்தலை முன்னிட்டு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் என மொத்தம் 126 குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஏப். 21-ஆம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.93,35,303 ரொக்கம், மதுபானங்கள் மற்றும் இதரப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.