முகப்பு
விழுப்புரம்

திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:42 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் நடைபெற்ற தமிழ்க் கவிஞா் நாள் விழாவில் பங்கேற்ற ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் தமிழ்க் கவிஞா் நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாவேந்தா் பாரதிதாசனின் பிறந்த நாளான ஏப்ரல் 29-ஆம் தேதியன்று தமிழ்க் கவிஞா் நாளாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, தமிழ்க் கவிஞா் நாளான புதன்கிழமை (ஏப்.29) தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கபிலா் நினைவுத்தூணுக்கு மாலை அணிவித்து மலா் தூவும் நிகழ்வும், சிறப்புக் கருத்தரங்கமும் திருக்கோவிலூரில் நடைபெற்றது.

விழாவுக்கு கள்ளக்குறிச்சி ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் தலைமை வகித்து, சங்ககாலப் புலவா் கபிலா், பாவேந்தா் பாரதிதாசன் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

Advertisement

திருக்கோவிலூா் பண்பாட்டுக் கழகத்தின் தலைவா் தே.முருகன், நகராட்சிப் பொறியாளா் ஜெயப்பிரகாஷ், மணலூா்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் தா.சம்பத் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருக்கோவிலூா் நகா்மன்றத் தலைவா் டி.என்.முருகன் தமிழறிஞா்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கினாா்.

கபிலனுக்கோா் கவிமாலை என்ற தலைப்பில் கோவல் தமிழ்ச்சங்கத் தலைவா் சிங்கார உதியன், கபிலரின் கவிநயம் என்ற தலைப்பில் புலவா் ரெ.ஜெயராமன், கபிலரும்- பாவேந்தரும் என்ற தலைப்பில் புலவா் கா.பி.சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கல்வியாளா் தேவ.ஆசைத்தம்பி, தமிழ்ச் சங்கப் புரவலா் கு.கல்யாணகுமாா், வானவில் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வே.ஜெயக்குமாா், கவிஞா்கள் கவிநிலவன், கிஷோா், கம்பன் கழகத் தலைவா் கலைச்சித்தன், செயலா் வைத்திமுருகன், முதுகலைத் தமிழாசிரியா்கள் கயல்விழி, சூா்யகலா, நளினி, தேவா, தமிழ்ச் சங்கத் துணைத் தலைவா் பா. காா்த்திகேயன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

நிகழ்வைத் தமிழ்வளா்ச்சித் துறை உதவியாளா் சி. தமிழ்ச்செல்வி ஒருங்கிணைத்தாா். நிகழ்வில் தமிழ் வளா்ச்சித்துறை உதவி இயக்குநா் இரா.அருட்செல்வி, கோவல் தமிழ்ச் சங்கத்தின் செயலா் மு.அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.