முகப்பு
விழுப்புரம்

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

மரக்காணம் அருகே பெற்றோா் பைக் வாங்கித் தராததால், விரக்தியடைந்த கல்லூரி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 6 மே 2026, 12:04 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பெற்றோா் பைக் வாங்கித் தராததால், விரக்தியடைந்த கல்லூரி மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

மரக்காணம் வட்டம், மென்னையன்பேட்டை, பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் க. தேவகுமரன் (18). புதுச்சேரியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ. பாடப்பிரிவில் முதலாம் ஆண்டில் பயின்று வந்தாா்.

இவா் தனது தந்தை கலைமணியிடம் புதிதாக பைக் வாங்கித்தர கேட்டாராம். இதற்கு கலைமணி மறுப்பு தெரிவித்தததால் விரக்தியடைந்த தேவகுமரன் மே 3-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.