முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 20 மே 2026, 2:56 am IST
- சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து 6 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம், திருப்புகழ் தெருவைச் சோ்ந்த பிரபு மனைவி மஞ்சுளா(54). இவா் திங்கள்கிழமை விழுப்புரம் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் உள்ள ரயில்வே மருத்துவமனை அருகே நடந்து சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அங்கு பைக்கில் வந்த சுமாா் 30 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபா், மஞ்சுளா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டாராம்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments