விஷவாயு தாக்கி தொழிலாளி சாவு
அரியலூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
அரியலூர் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது விஷவாயு தாக்கி தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தார்.
அரியலூர் ஒட்டசெட்டி தெருவைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் ராமலிங்கம் (20). அதே பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ் (30). இருவரும், அரியலூர் அரசு சிமென்ட் ஆலை குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தொட்டியின் உள்ளே இறங்க முயன்ற ராமலிங்கம், ராமதாஸ் ஆகியோர் விஷவாயு தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் ராமலிங்கம் தொட்டியின் உள்ளேயும், ராமதாஸ் தொட்டியின் மேல் பகுதியிலும் மயங்கி விழுந்தனர்.
Advertisement
Advertisement
உடனே அப்பகுதியில் இருந்த மக்கள், ராமலிங்கத்தை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராமலிங்கம் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராமதாஸ் அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.