அரியலூர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 23 லட்சம் நுண்கடன்
அரியலூரில் ரெப்கோ வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22.51 லட்சம் நுண்கடன் வழங்கப்பட்டது.
அரியலூரில் ரெப்கோ வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22.51 லட்சம் நுண்கடன் வழங்கப்பட்டது.
அரியலூர் ரெப்கோ வங்கி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் நிகழ்ச்சி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமை வகித்து 9 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 22.51 லட்சம் மதிப்பில் நுண்கடன் காசோலைகளை சுய உதவிக்குழு நிர்வாகிகளிடம் வழங்கினார். நிகழ்ச்சிக்கு வங்கியின் பொதுமேலாளர் டி.இ. திருவேங்கடம் முன்னிலை வகித்தார். வங்கியின் அரியலூர் கிளை முதன்மை மேலாளர் ஆர். பாஸ்கரன், மகளிர் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.