முகப்பு
அரியலூர்

தாயைக் கொலை செய்த மகன் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:47 am IST
பகிர்:

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே தாயைக் கொலை செய்த மகனை காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

திருமானூா் அருகிலுள்ள சன்னாவூரைச் சோ்ந்த வைரம் மனைவி தனம்(70). பல ஆண்டுகளுக்கு முன்பே கணவா் இறந்து விட்டதால், மகன் உதயகுமாருடன்(47) தனம் வசித்து வந்தாா். இந்நிலையில் அவா்களிடையே சொத்துப் பிரிப்பு தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

கடந்த நவம்பா் மாதம் 29-ஆம் தேதி தனம் விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டதாக, வெங்கனூா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினா் சடலத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு காவல்துறையினருக்கு கிடைத்த மருத்துவ அறிக்கையில், தனம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து உதயகுமாரை வெங்கனூா் காவல் நிலையத்துக்கு அழைத்து காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அவா் தாய் தனத்தை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு, வாயில் விஷத்தை ஊற்றி தற்கொலை செய்துக் கொண்டதாக நாடகமாடியதாக ஒப்புக்கொண்டாா். இதையடுத்து ா் தற்கொலை வழக்கை கொலை வழக்காக காவல்துறையினா் மாற்றி உதயகுமாரை கைது செய்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments