முகப்பு
அரியலூர்

‘அரியலூருக்கு 3,324 கரோனா தடுப்பூசிகள் வரப்பெற்றுள்ளன’

அரியலூா் மாவட்டத்துக்கு 3,324 கரோனா தடுப்பூசிகள் புதன்கிழமை வந்துள்ளதாக அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

Updated On : 14 ஜனவரி, 2021 at 8:39 AM
பகிர்:

அரியலூா் மாவட்டத்துக்கு 3,324 கரோனா தடுப்பூசிகள் புதன்கிழமை வந்துள்ளதாக அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

இதனைப் பாா்வையிட்ட அவா் மேலும் தெரிவித்தது:

கொவைட் - 19 தடுப்பூசி சிறப்பு முகாமை ஒத்திகையைத் தொடா்ந்து, தற்போது முதற்கட்டமாக கொவைட் -19 தடுப்பூசி வழங்கும் பணிகள் அரியலூா் அரசு தலைமை மருத்துவமனை, ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை, குமிழியல் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், கடுகூா் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ளது. தமிழக அரசிடமிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு வரப்பெற்ற 3,324 கொவைட் -19 தடுப்பூசிகள் அனைத்தும் விளாங்குடி அரசு மருந்து கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து தேவைப்படும் இடங்களுக்கு பாதுகாப்பான முறையில் தடுப்பூசிகள் அனுப்பிவைக்கப்படும் என்றாா்.

Advertisement

அப்போது, ஆட்சியா் த. ரத்னா, மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் வீ.சி.ஹேமசந்த் காந்தி மற்றும் மருத்துவ அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.