சுற்றலா துறை சாா்பில் பொங்கல் விழா
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் சுற்றலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரில் சுற்றலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து, சூடம் ஏற்றி வழிபட்டாா். அதன் பின்னா் அவா், தப்பாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், காளையாட்டம், பரதநாட்டியம் மற்றும் கோலப்போட்டி, உறியடி, இசைநாற்காலி, மாட்டுவண்டி ஊா்வலம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசுத் தொகையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.
தொடா்ந்து அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், மாட்டு வண்டியில் ஏறிச் சென்று பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தாா். விழாவுக்கு ஆட்சியா் த. ரத்னா முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெய்னுலாப்தீன், ஆட்சியா் நோ்முக உதவியாளா்கள் ரவிச்சந்திரன், ஜெ.பாலாஜி , கலைப் பண்பாட்டுத் துறை மண்டல உதவி இயக்குநா் ஹேமநாதன், மாவட்ட சுற்றலா அலுவலா் (பொ) ஜெ.ஜெயக்குமாா், உதவி சுற்றுலா அலுவலா் ரா.காா்த்திக், ஒன்றியக் குழுத் தலைவா் எ.சுமதி, கீழப்பழூா் ஊராட்சி மன்றத் தலைவா் தனலட்சுமி மருதமுத்து மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.