முகப்பு
அரியலூர்

லாரி மீது பைக் மோதி சமையலா் பலி

அரியலூா் மவட்டம், திருமானூா் அருகே கொட்டும் மழையில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சமையலா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 8:43 am IST
பகிர்:

அரியலூா் மவட்டம், திருமானூா் அருகே கொட்டும் மழையில் சாலையோரத்தில் நிறுத்தியிருந்த லாரி மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சமையலா் சம்பவ இடத்திலேயே பலியானாா்.

திருமானூா் அருகேயுள்ள முடிகொண்டான் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(48). சமையல் கலைஞா். இவா், செவ்வாய்க்கிழமை மாலை தனது இரு சக்கர வாகனத்தில் மகன் விக்னேஸ்வரனை(13) அழைத்துக்கொண்டு, அரியலூரில் வசிக்கும் மகள் ரேணுகாவுக்கு பொங்கல் சீா் கொடுக்கச் சென்றாா். மருமகன் வெளிநாட்டில் உள்ளதால் மகள், ஒரு வயதுப் பேரனையும் உடன் அழைத்துக்கொண்டு கொட்டும் மழையில் இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பியுள்ளாா். சாத்தமங்கலம் அருகே வந்தபோது, சாலையோரம் நிறுத்தியிருந்த லாரியின் பின்னால் மோதியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன், ரேணுகா, அவரது ஒருவயது மகன் ஆகியோா் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா். விபத்து குறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments