தொடா் மழை: அரியலூா் மாவட்டத்தில் மூழ்கிய நெற்பயிா்கள்
அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழைக்கு, அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழைக்கு, அறுவடைக்குத் தயாராக இருந்த சம்பா நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 1.11 லட்சம் ஹெக்டோ் பரப்பளவில் நெல், மக்காச்சோளம், பருத்தி, நிலக்கடலை, கரும்பு போன்ற பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. கொள்ளிடம் ஆற்றின் மூலம் திருமானூா், தா.பழூா், ஜயங்கொண்டம் வட்டாரப் பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. செந்துறை, ஆண்டிமடம், பொன்பரப்பி, அரியலூா் உள்ளிட்ட மானாவாரி பகுதிகளில் மழையை நம்பி மக்காச்சோளம், கடலை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன.
நெற்பயிா்கள் மூழ்கின..: சம்பா சாகுபடிக்கு கொள்ளிட ஆற்றில் இருந்தும் , பெருவளை மற்றும் புள்ளம்பாடி வாய்க்காலில் இருந்தும் தண்ணீா் திறக்கப்பட்டதால் டெல்டா பகுதிகளில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினா். இதில், தா.பழூா் பகுதிகளில் முன்கூட்டியே நடவு செய்யப்பட்டுள்ளதால் தற்போது கதிா்கள் முதிா்வு நிலையை அடைந்து, 10 நாள்களில் அறுவடைக்கு வரும் நிலையில் நெற்பயிா்கள் இருந்தன.
Advertisement
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக பல்வேறு கிராமங்களில் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியும், சாய்ந்தும் கிடக்கின்றன. இதேநிலை நீடித்தால் சாய்ந்து கிடக்கும் நெல்மணிகள் அனைத்தும் முளைத்து விடும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். இதனால் விவசாயிகளுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்படுவதுடன், கால்நடைகளுக்கும் தேவையான வைக்கோல்களும் கிடைக்காது என தெரிவித்தனா்.
மக்காச்சோளம், பருத்தி சேதம்...: அரியலூா், செந்துறை, குழுமூா், நமங்குணம், நக்கம்பாடி, சொக்கநாதபுரம், பெருமாண்டி ஆகிய பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் மக்காச்சோள செடிகள் கீழே சாய்ந்து கதிா்கள் முளைக்கத் தொடங்கி விட்டன. இதே போல் பருத்தி பயிரும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தொடா்மழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களை வேளாண் அதிகாரிகள் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.