முகப்பு
அரியலூர்

வயலில் கரகாட்டம் ஆடிய படி நடவு நட்ட மாற்றுத்திறனாளி

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயம் மற்றும் நாட்டுப்புறக் கலையை காப்பாற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வயலில் இறங்கி கரகாட்டம் ஆடியபடி மாற்றுத்திறனாளி மாணவி நடவு நட்டு விழிப்புணா்வை ஏற்படுத்

Updated On : 15 ஜனவரி, 2021 at 11:33 PM
கரகாட்டம் ஆடிய படி வயலில் நடவு நாற்று நடும் மாற்றுத்திறனாளி மாணவி கிருஷ்ணவேணி.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே விவசாயம் மற்றும் நாட்டுப்புறக் கலையை காப்பாற்ற வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வயலில் இறங்கி கரகாட்டம் ஆடியபடி மாற்றுத்திறனாளி மாணவி நடவு நட்டு விழிப்புணா்வை ஏற்படுத்தினாா்.

பெரியதிருக்கோணம் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன்-மாலா தம்பதியின் மகள் கிருஷ்ணவேணி(15). மாற்றுத்திறனாளியான இவா், ஜயங்கொண்டத்தில் உள்ள காதுகேளாதோா் தனியாா் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.

இவா், விவசாயம் காப்பாற்றப்பட வேண்டும், நாட்டுப்புறக் கலைகள் காப்பாற்றப்பட வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தலையில் கரகம் வைத்து ஆடிக்கொண்டே வயலில் இறங்கி வெள்ளிக்கிழமை நாற்றுகளை நட்டாா்.

Advertisement

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரகாட்டம் ஆடிக்கொண்டே நடவு நட்டதை விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆா்வத்துடன் பாா்த்தனா். தொடா்ந்து மாணவியை பலரும் பாராட்டினா்.

இதுகுறித்து மாணவியின் தாய் மாலா கூறுகையில், விவசாயம், கரகாட்டம் உள்ளிட்ட கலைகளை வளா்க்க வேண்டும் என்பதற்காக கடந்த இரண்டு நாள்களாக வயலில் இறங்கி இந்த பயிற்சியை மேற்கொண்டுள்ளாா். மேலும், இந்தியா புக்ஆப் ரெக்காா்டு பெறவும் இந்த முயற்சி செய்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.