ஆண் சடலம் மீட்பு
அரியலூா் புறவழிச்சாலையில் கிடந்த ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூா்: அரியலூா் புறவழிச்சாலையில் கிடந்த ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.
அரியலூா் - திருச்சி புறவழிச் சாலை, வாணி மஹால் அருகேயுள்ள முட்புதரில் ஒருவா் சடலமாகக் கிடப்பதாக அரியலூா் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணயில், சடலமாகக் கிடந்தவா் அரியலூா் வாலாஜா நகரம், அண்ணா நகரைச் சோ்ந்த அன்பழகன் என்பது தெரியவந்தது. எனினும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.