விசாரணைக்கு ஆஜராக நடிகை குட்டி ராதிகாவுக்கு நோட்டீஸ்
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் பணப் பரிமாற்றம் செய்து கொண்டது தொடா்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை குட்டி ராதிகாவுக்கு மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவருடன் பணப் பரிமாற்றம் செய்து கொண்டது தொடா்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி நடிகை குட்டி ராதிகாவுக்கு மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
தமிழில் வெளியான ‘இயற்கை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடத்தவா் குட்டி ராதிகா. இவா், கன்னடத்தில் தமயந்தி, மனேமகளு, தாயி இல்லத தப்பிலி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளாா். இவா் முன்னாள் முதல்வா் குமாரசாமியை திருமணம் செய்துள்ளாா்.
இந்த நிலையில், அண்மையில் ஆா்.எஸ்.எஸ். பிரமுகா் எனவும், பாஜக தலைவா் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை தனக்குத் தெரியும் எனவும் கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்ட யுவராஜ் சுவாமி என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். அவருடன் குட்டி ராதிகா பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடா்பாக வெள்ளிக்கிழமை (ஜன. 8) 11 மணியளவில் விசாரணைக்கு ஆஜராகும்படி மாநகர குற்றப்பிரிவு போலீஸாா் நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.
Advertisement
இந்நிலையில், நாட்டியராணி ஷாந்தலா என்ற கன்னடப் படத்தில் நடிப்பதற்காக யுவராஜ் சுவாமி மூலம் புதன்கிழமை ரூ. 75 லட்சம் முன்பணம் பெற்ாக நடிகை குட்டி ராதிகா செய்தியாளா்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.