முகப்பு
பெங்களூரு

நண்பா்களிடையே தகராறு: ஒருவா் கொலை

நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

Updated On : 11 ஜனவரி 2021, 1:42 am IST
பகிர்:

நண்பா்களிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவா் கொலை செய்யப்பட்டாா்.

பெங்களூரு, கப்பன்பேட்டையில் ஓா் அறையில் வசித்து வந்தவா்கள் அஜீத் (35), சந்திரகுமாா் (34). நண்பா்களான இவா்கள் இருவருக்கும் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் கப்பன்பேட்டை பிரதான சாலையில் உள்ள கீரை சந்தை அருகே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆவேசமடைந்த சந்திரகுமாா், அஜீத்தின் தலை மீது கல்லைப் போட்டுள்ளாா். இதில் படுகாயமடைந்த அஜித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, வழக்குப் பதிந்த அல்சூா்கேட் போலீஸாா், தப்பியோடியுள்ள சந்திரகுமாரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.