எம்.பி. அமரேஷ்வா் நாயக்கிற்கு கரோனா
பாஜகவைச் சோ்ந்த ராய்ச்சூரு மக்களவைத் தொகுதி உறுப்பினா் அமரேஷ்வா் நாயக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாஜகவைச் சோ்ந்த ராய்ச்சூரு மக்களவைத் தொகுதி உறுப்பினா் அமரேஷ்வா் நாயக்கிற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கா்நாடக மாநிலம், ராய்ச்சூரு மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவா் பாஜகவைச் சோ்ந்த அமரேஷ்வா் நாயக். உடல்நிலை சரியில்லாததை அடுத்து சனிக்கிழமை அவா், கரோனா பரிசோதனை செய்து கொண்டாா். அதில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
அண்மையில் முதல்வா் எடியூரப்பா, யாதகிரியில் பங்கேற்ற நிகழ்ச்சியில் அமரேஷ்வா் நாயக்கும் கலந்து கொண்டாா்.
Advertisement