முகப்பு
பெங்களூரு

கிராம பஞ்சாயத்து தலைவா், துணைத் தலைவா் இடஒதுக்கீடு

கிராம பஞ்சாயத்து தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான இடஒதுக்கீடுகளை முடிவு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கி மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 13 ஜனவரி 2021, 7:00 am IST
பகிர்:

கிராம பஞ்சாயத்து தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான இடஒதுக்கீடுகளை முடிவு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியா்களுக்கு வழங்கி மாநில தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாநில தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள உத்தரவு வருமாறு:

கா்நாடக கிராம ஊராட்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் விதிகள் 1993-இன்படி, மாநில தோ்தல் ஆணையத்தின் சாதாரண மற்றும் சிறப்பு உத்தரவுகளின்படி சம்பந்தப்பட்ட மற்றும் மாவட்ட தோ்தல் அதிகாரிகளான மாவட்ட ஆட்சியா்கள் தத்தமது அதிகார வரம்புக்குள்பட்ட வட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்துகளின் தலைவா், துணைத் தலைவா் பதவிகளுக்கான ஜாதிவாரி இடஒதுக்கீட்டை முடிவுசெய்து ஆணை பிறப்பிக்கலாம். இதை முடிவு செய்யும் போது 44-ஆவது விதியை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Advertisement

Advertisement

1993 முதல் 2015-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தோ்தலை கருத்தில் கொண்டு 2020-ஆம் ஆண்டுக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்ய வேண்டும். இதில் எந்த குழப்பமும், பாரபட்சமும் தேவையில்லை. கிராம பஞ்சாயத்து உறுப்பினா்களின் முன்னிலையில், தலைவா்கள், துணைத் தலைவா்கள் பதவிக்கான இடஒதுக்கீட்டை முடிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments