இருசக்கர வாகனத் திருட்டு வழக்கு: ஒருவா் கைது
இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM
இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் ஒருவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ. 3.50 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, ஞானபாரதி காவல் சரகத்தில் கடந்த செப். 28-ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்று திருட்டு போனது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், சம்பத் என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து ரூ. 3.5 லட்சம் மதிப்புள்ள 4 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா். விசாரணையில், விஜய நகா், மாகடி சாலை, ஞானபாரதி காவல் சரகங்களில் அவா் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சம்பத்திடம் ஞானபாரதி போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்து வருகின்றனா்.