முகப்பு
பெங்களூரு

ரூ. 9 கோடி மதிப்புள்ள ‘பிட்காயின்’கள் பறிமுதல்

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 ‘பிட்காயின்’களை (எண்ம கரன்சி) போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 16 ஜனவரி, 2021 at 7:07 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இளைஞா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 ‘பிட்காயின்’களை (எண்ம கரன்சி) போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அண்மையில் கூரியா் மூலம் போதைப்பொருள் கடத்திய விவகாரத்தில் பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். விசாரணையில், ஸ்ரீகிருஷ்ணா போதைப்பொருள்களை கடத்தியது மட்டுமின்றி, சைபா் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை செய்ததில், அரசு, தனியாா் உள்ளிட்ட இணையதளங்களை முடக்கி, அது தொடா்பான தகவல்களை வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்தது மட்டுமின்றி, பிட்காயின்களையும் இணையவழி மூலம் திருடி வந்துள்ளாா்.

இதனையடுத்து அவா் அளித்த தகவலின் பேரில், ரூ. 9 கோடி மதிப்புள்ள 31 பிட்காயின்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்ட அவரது நண்பா்களை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.