அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!
அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது பற்றி...
அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. இதன்பின்னர் பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.
இதனிடையே 4 எம்எல்ஏக்கள் மட்டும் ராஜிநாமா செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தொகுதி மக்களின் முடிவுக்கேற்ப தனது முடிவை அறிவிப்பதாகக் கூறி வந்தார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகரைச் சந்தித்து அவர் தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
விஜயபாஸ்கரின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் கூறியுள்ளார்.
விஜயபாஸ்கர் தொடர்ந்து தவெகவில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது.