தவெகவில் இணைகிறாரா சி. விஜயபாஸ்கர்? இபிஎஸ்ஸுக்கு எதிராக தொடர் பதிவு!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளது பற்றி....
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ், எஸ்.பி. வேலுமணி என இரண்டாகப் பிரிந்தது. இதன்பின்னர் பல்வேறு அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு இரு அணிகளும் இணைந்தன.
இதனிடையே 4 எம்எல்ஏக்கள் மட்டும் ராஜிநாமா செய்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தொகுதி மக்களின் முடிவுக்கேற்ப தனது முடிவை அறிவிப்பதாகக் கூறியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவர் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
சி. விஜயபாஸ்கர் இன்று தனது எக்ஸ் பக்கத்தில்,
"தலைமை என்பது அதிகாரமோ, ஆணவமோ அல்ல… ‘அர்ப்பணிப்பு மிகுந்த அரவணைப்பு’
உழைக்கும் தொண்டர்களின் மனதை வெல்ல முடியாத தலைமை, மக்களின் மனதை எப்படி வெல்லும்?
உணர்வுகளை மதிக்காத இடத்தில் உண்மையான பயணம் சாத்தியமா?" என்று பதிவிட்டுள்ளார்.
விஜயபாஸ்கர் ஏற்கெனவே தவெகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த பதிவு மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே உள்ளது.
நேற்று, "உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும்.. ‘வெற்றிக்கான பாதை அல்ல.’
வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல… எத்தனை பேரை ஒன்றிணைத்தோம், எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.