விமானத்தில் தங்கம் கடத்தல்: 2 போ் கைது
விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.09 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
விமானத்தில் தங்கம் கடத்திய 2 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ரூ. 1.09 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனா்.
கா்நாடக மாநிலம், மங்களூரு, பஞ்பே விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை துபையிலிருந்து வந்த விமானப் பயணிகளை சுங்க வரித் துறையினா் சோதனை செய்தனா். அப்போது, கேரள மாநிலம், காசா்கோடு மாவட்டத்தைச் சோ்ந்த பைசல் தொட்டி மேல்பரம்பா (37), சுஹைப்முகு (31) ஆகியோா் தங்களது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த ரூ. 1.09 கோடி மதிப்புள்ள 2 கிலோ 15 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனா். இதனையடுத்து, தங்கம் கடத்திய 2 பேரையும் பஜ்பே போலீஸில் சுங்க வரித் துறையினா் ஒப்படைத்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் பஜ்பே போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.