பங்குச் சந்தையில் 57 புள்ளிகள் உயர்வு
மத்திய பட்ஜெட்டில் அதிருப்தியுற்ற மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 57
மத்திய பட்ஜெட்டில் அதிருப்தியுற்ற மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 57 புள்ளிகள் உயர்ந்தது.
மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த பல்வேறு அம்சங்களில் அதிருப்தியடைந்ததைத் தொடர்ந்து வியாழக்கிழமை பங்குச் சந்தையின் குறியீட்டளவான சென்செக்ஸ் 291 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. ஆயினும் வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை மீண்டும் லாபகரமான பாதைக்குத் திரும்பியது. வர்த்தக முடிவில் 57 புள்ளிகள் உயர்ந்து சென்செக்ஸ் குறியீட்டளவு 18,918 என்ற அளவில் நிலைத்தது.
மாருதி சுஸýகி நிறுவனத்தின் பங்கு விலை 5 சதவீதம் வரை அதிகரித்து விற்பனை ஆகின. பஜாஜ் ஆட்டோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது. எச்.டி.எஃப்.சி., லார்சன் அண்ட் டூப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சிப்லா, ஜிண்டால் ஸ்டீல், டாடா பவர், கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இரண்டு முதல் மூன்று சதவீதம் வரை அதிக விலைக்கு விற்பனை ஆகின.
Advertisement
நுகர்வோர் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், மூலதனப் பொருள் நிறுவனங்கள், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், வங்கித் துறை ஆகியவற்றின் பங்குகளுக்கு முதலீட்டாளர்களிடையே வரவேற்பு இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சற்றே சரிவுற்றதை தொடர்ந்து, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்ஃபோசிஸ் போன்றவை லேசான லாபம் அடைந்தன.
தேசிய பங்குச் சந்தை: தேசிய பங்குச் சந்தையிலும் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகம் லாபகரமாக இருந்தது. நிஃப்டி குறியீட்டளவில் 26 புள்ளிகள் அதிகரித்து 5,719 என்ற அளவில் நிலைத்தது.