பவுனுக்கு ரூ.344 உயர்வு
ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 11) பவுனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூலை 11) பவுனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. சென்னை மார்க்கெட்டில் ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச சந்தையில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படுகிறது. கடந்த மாதம் 25-ஆம் தேதி சென்னையில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்து 208-ஆக இருந்தது. அதன் பிறகு சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட சரிவு காரணமாக ரூ.20 ஆயிரத்துக்கும் குறைவாகவே ஒரு பவுன் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் வியாழக்கிழமை சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயர்ந்தது. இதனால் இந்தியாவிலும் அதன் விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்ந்ததன் எதிரொலியாக வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.2,525 உயர்ந்து சென்னை மார்க்கெட்டில் ரூ.42 ஆயிரத்து 665-க்கு விற்கப்பட்டது.
Advertisement
Advertisement
வியாழக்கிழமை
மார்க்கெட் நிலவரம்:
ஒரு கிராம் ரூ.2,515
ஒரு பவுன் ரூ.20,120
ஒரு கிராம்
வெள்ளி ரூ.45.70
ஒரு கிலோ
வெள்ளி ரூ.42,665
புதன்கிழமை
மார்க்கெட் நிலவரம்:
ஒரு கிராம் ரூ.2,472
ஒரு பவுன் ரூ.19,776
ஒரு கிராம்
வெள்ளி ரூ.43
ஒரு கிலோ
வெள்ளி ரூ.40,180
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.