எழுதுகோல் வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா
சாம்சங் நிறுவனத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போன் எழுதுகோல் சிறப்பம்சத்துடன் ஜனவரி 14-ஆம் தேதி அறிமுகமாகிறது.
சாம்சங் நிறுவனத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போன் எழுதுகோல் சிறப்பம்சத்துடன் ஜனவரி 14-ஆம் தேதி அறிமுகமாகிறது.
சாம்சங் நிறுவனத்தின் மற்ற கேலக்ஸி வகை செல்போன்களில் வழங்கப்பட்ட எழுதுகோல் வசதிகளை விட கூடுதல் சிறப்பம்சங்களுடன் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போன் சந்தைக்கு வருகிறது.
கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில், மற்ற வகை செல்போன்களின் எழுதுகோல் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், எழுதுகோலின் முனையில் அழுத்தம் உணரும் சென்சார் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேம்களை விளையாடவும், விடியோக்களை இயக்கவும், நிறுத்தி வைக்கவும், புகைப்படங்களை எடுக்கவும் முடியும்.
Advertisement
Advertisement
சாம்சங் கேலக்ஸியில் வெளிவரவுள்ள கேலக்ஸி எஸ் 21 மற்றும் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஆகிய வகை செல்போன்களை விட கூடுதல் கேமரா வசதியையும், வெளிப்புறத் தோற்றத்தையும் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா கொண்டுள்ளது.
கேலக்ஸி எஸ் 21 6.2 அங்குல திரையும், கேலக்ஸி எஸ் 21 பிளஸில் 6.7 அங்குல திரையும், கேலக்ஸி எஸ் 21 அல்ட்ராவில் 6.8 அங்குல திரையும் வழங்கப்பட்டுள்ளது.
கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா வகை செல்போனில் முன்புறத்தில் 10MP கேமராவும், பின்புறத்தில் 10 மடங்கு ஜூமிங் வசதியுடன் 108MP மெயின் கேமராவும், 12MP அல்ட்ரா வைட் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.