காலமானார் பேராசிரியர் தளபதி
தமிழ்ப் பேராசிரியர் சு. தளபதி (47) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை (மார்ச் 11) அதிகாலை
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM
தமிழ்ப் பேராசிரியர் சு. தளபதி (47) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை (மார்ச் 11) அதிகாலை காலமானார்.
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக அவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அபிராமி என்ற மனைவியும், சுகதேவ் என்ற மகனும், சுதமதி என்ற மகளும் உள்ளனர்.
பாபநாசத்தில் உள்ள திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.
Advertisement
திருப்போரூர் முருகன் கோயில் வரலாற்றைத் தொகுத்ததிலும், முருக வழிபாடு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தியதிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.