முகப்பு
சென்னை

சாலை விபத்தில் விமானப் படை போலீஸ்காரர் சாவு

சாலைவிபத்தில் விமானப்படை போலீஸ்காரர் உயிரிழந்தார்.

Updated On : 12 மார்ச், 2013 at 3:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

சாலைவிபத்தில் விமானப்படை போலீஸ்காரர் உயிரிழந்தார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தாம்பரம் ஜி.3 விமானப்படையில் போலீஸாக (எல்.ஏ.சி பிரிவில்) பணிபுரிந்து வருபவர் சோனுவர்மா (22). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது பன்றியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த சோனுவர்மா பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் உயிரிழந்தார். பல்லாவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸôர் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.