முகப்பு
சென்னை

பஸ் மோதி கல்லூரி மாணவர் சாவு

சென்னை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே

Updated On : 12 மார்ச், 2013 at 3:35 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

சென்னை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஆவடியை அடுத்த பட்டாபிராமைச் சேர்ந்தவர் சாம்ராஜின் மகன் ராம்கி (21). இவர் பூந்தமல்லியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

 ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர் மனோஜ் (21) என்பவருடன் பெரும்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்தபோது தாம்பரத்தில் இருந்து திருவான்மியூர் செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

Advertisement

 இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராம்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். உடன் சென்ற மனோஜ் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இது குறித்து மனோஜ் கொடுத்த புகாரின் பேரில் பல்லாவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.