முகப்பு
சென்னை

எண்ணூரில் பொதுமக்கள் உண்ணாவிரதம், ரயில் மறியல்

எண்ணூரில் இலங்கை அரசை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம், ரயில் மறியல்

Updated On : 22 மார்ச் 2013, 5:07 am IST
பகிர்:

எண்ணூரில் இலங்கை அரசை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரதம், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் பர்மாவிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த திங்கள்கழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

இந்நிலையில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை சென்னை-கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் உள்ள கத்திவாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீஸôர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் இரு மார்க்கத்திலும் ரயில் சேவை சுமார் ஒரு மணி நேரம் தடைபட்டது.

உண்ணாவிரதப்போராட்டம்:
எர்ணாவூர் பகுதியில் உள்ள பாரத்நகர், ராமகிருஷ்ணாநகர், பாரதியார் நகரைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வியாழக்கிழமை பாரத்நகர் ரவுண்டானா அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 400 பேர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.