வேல்ஸ் பல்கலை.யில் சர்வதேச வணிக மேலாண்மைக் கருத்தரங்கு
சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் சர்வதேசக் கருத்தரங்கு
சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் சர்வதேசக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
மேலாண்மைத் துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்த சர்வதேசக் கருத்தரங்கில் பொருளாதாரச் சரிவின் மூலம் மேலாண்மைத் துறை எதிர்நோக்கிய பிரச்னைகள், சர்வதேச அளவில் நிர்வாகத்துறை முன்னேற்றங்கள், மேலாண்மை நிர்வாகத்தை மேம்படுத்தக் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன.
டோக்கியோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் கசுயோகி மோட்டோகஷி, ராஞ்சி ஐ.ஐ.எம். இயக்குனர் எம்.ஜி.சேவியர், மலேசிய பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் சுசிலா தேவி, மலேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் என்.செல்வராஜ் ஆகியோர் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டனர்.
Advertisement
வேல்ஸ் பல்கலைக்கழக துணைவேந்தர் இ.கோபிநாதன், பதிவாளர் கோவிந்தராஜன், வணிக மேலாண்மைத்துறைத் தலைவர் எஸ்.ப்ரிதா, எஸ்.வசந்தா, கே.எஸ்.ஹேமமாலினி, ஜெரீன் பீட்டர், எஸ்.சுதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.