முகப்பு
சென்னை

கோயில் காவலாளி கொலை வழக்கு: 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து

கோயில் காவலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்

Updated On : 2 ஏப்ரல் 2013, 4:49 am IST
பகிர்:

கோயில் காவலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.

ஊத்துக்குளியில் உள்ள கோயில் ஒன்றில் காவலாளியாகப் பணியாற்றிய முருகசாமி என்பவர் 2004 ஆம் ஆண்டு கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். கோயிலின் பொருள்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன.

இந்தச் சம்பவம் தொடர்பாக சங்கர், ரமேஷ் என்ற 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த ஈரோடு விரைவு நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

Advertisement

Advertisement

இதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் சங்கர், ரமேஷ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டனர்.

கோயில் காவலாளியை இவர்கள் 2 பேரும் கொலை செய்தனர் என்பதையோ, கோயில் பொருள்களை இவர்கள்தான் கொள்ளையடித்துச் சென்றனர் என்பதையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை போலீஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. ஆகவே, இருவருக்கும் கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.