வீட்டு கதவை உடைத்து ரூ.1 லட்சம் நகை, பணம் திருட்டு
சென்னை கொடுங்கையூரில் ஆளில்லாத வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM
சென்னை கொடுங்கையூரில் ஆளில்லாத வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கொடுங்கையூர் எவரடி காலனி 10-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (67). இவர் கடந்த 27-ஆம் தேதி குடும்பத்துடன் கேரளத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தாராம்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement