முகப்பு
சென்னை

வீட்டு கதவை உடைத்து ரூ.1 லட்சம் நகை, பணம் திருட்டு

சென்னை கொடுங்கையூரில் ஆளில்லாத வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

Updated On : 2 மே, 2013 at 4:22 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:09 PM

சென்னை கொடுங்கையூரில் ஆளில்லாத வீட்டுக் கதவை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: கொடுங்கையூர் எவரடி காலனி 10-ஆவது தெருவைச் சேர்ந்தவர் வாசுதேவன் (67). இவர் கடந்த 27-ஆம் தேதி குடும்பத்துடன் கேரளத்துக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை வீட்டுக்கு வந்தாராம்.

அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கநகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கொடுங்கையூர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.