மருத்துவமனையில் ஜி.கே.மணி அனுமதி
பாமக தலைவர் ஜி.கே.மணி முதுகுதண்டு வலி காரணமாக சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:11 PM
பாமக தலைவர் ஜி.கே.மணி முதுகுதண்டு வலி காரணமாக சனிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாள்களாக ஜி.கே.மணி முதுகு தண்டு வலி காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் சனிக்கிழமை காலை சென்னையில் உள்ள அவர் வீட்டில் இருந்தபோது மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரது குடும்பத்தைச் சார்ந்தோர் உடனடியாக அவரை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
Advertisement